Analysis of information sources in references of the Wikipedia article "மு. கருணாநிதி" in Tamil language version.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போற்றி வளர்த்த இயக்கக் கொள்கைகளை மய்யமாகக் கொண்டு 'தூக்குமேடை' என்ற நாடகத்தைக் கலைஞர் எழுதினார். அந்த நாடகத்தில் நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களுடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். முதன் முதலாக இந்நாடகம் தஞ்சையில் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகத்திற்கு அழகர்சாமி தலைமை தாங்கினார். தலைமையுரை யின்போது நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களை உற்சாக மூட்டி - ஊக்கமூட்டிப் பேசியதோடு கலைஞர் அவர்களின் எழுத்தாற்றலையும் நடிப்பையும் பார்த்து விட்டு 'கலைஞர்' என்ற பட்டத்தைத் தம் வாயால் உச்சரித்து வழங்கினார். அது முதல் மு. கருணாநிதி என்ற பெயரோடு கலைஞர் என்ற அடைமொழி சேர்த்து வழங்கப்படுவதாயிற்று. பொதுவாழ்வில் அவர் புகழ் சிறக்கச் சிறக்க அவரது இயற்பெயரைப் பெரும்பாலோர் எழுதுவதோ பேசுவதோ கிடையாது. 'கலைஞர்' என்ற அடைமொழி இன்று தமிழ்நாட்டில் அவரை மட்டுமே குறிக்கின்ற ஒரு சொல்லாகி விட்டது. லெனின், ஸ்டாலின் போன்ற பெயர்கள் எப்படி இயற்பெயராக இல்லாமல் கட்சிக்காரர்களால் வழங்கப்படும் புகழடைந்த பெயர்களாக விளங்கி வருகின்றனவோ, அவ்வாறே, கலைஞர் என்ற பெயரும் இன்று நிலைபெற்ற பெயராக ஆகிவிட்டது. இத்தகைய சிறப்புக்குரிய பட்டத்தை வழங்கியவர் பட்டுக்கோட்டை அழகர்சாமி அவர்களாவார்.
Born on 3 June 1924 , in Thirukkuvalai village , Tanjavur district , to Muththuvelar and Anjugam who belonged to the ' Isai vellalar ' community